சென்னை:  2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரயில் நிலையங்களில் பயணிகளின் வாகனங்கள் நிறுத்தும் வகையில்,  பார்க்கிங் வசதிக்கு கூடுதலாக 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் தற்போது நடைபெற்றும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பயணிகள் தங்களது வாகனங்கனை நிறுத்தும் வகையில், ரயில் நிலையங் களில் சிறப்பான பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது பல ரயில் நிலையங்களில், போதுமான அளவில் வாகனங்களை பார்க்கிங் வசதிகள் இல்லாத நிலையில், இனிமேல் பயன்பாட்டுக்கு வரும்  ரயில் நிலையங்களில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, சன்னை கோயம்பேடு, பட்ரோடு, பூந்தமல்லி, சோழிங்கநல்லுார், சிறுசேரி உள்ளிட்ட முக்கிய இடங்களில் அமையவுள்ள ரயில் நிலையங்களில், வாகன ஓட்டினகளின் வசதிக்காக   கூடுதலாக  10 ஏக்கருக்கும் அதிகமான இடங்களை தேர்வு செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில்  தற்போது இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் காரணமாக,  புறநகர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க முடிவு செய்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில், சென்னையில் நாள் ஒன்றுக்கு மெட்ரோ ரயில்களில்  3 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். இதனால்  முக்கிய ரயில் நிலையங்களில் காலை, மாலை வேளைகளில் கூட்டம் நிரம்பிவழிகிறது.  மேலும் பல ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால், பார்க்கிங் வசதியை மேலும் பெரிதாக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில்,   தற்போது 3 வழித்தடங்களில் நடைபெற்று வரும்  இரண்டாவது கட்ட  மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில், சுமார்  120-க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. அனைத்து நிலையங்களிலும் வாகன நிறுத்த வசதி  ஏற்படுத்தப்பட உள்ள நிலையில், சில இடங்களில் கூடுதல் இடங்கள் பார்க்கிங் வசதிக்காக ஏற்படுத்த மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து கூறிய சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள்,  சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. சில, மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தங்களில் உள்ள பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வுகாணப்படுகிறது. அருகே இருக்கும் இடங்களை வாங்கி வருகிறோம். மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்த இடங்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில், கூடுதல் இடங்களை தேர்வு செய்துவருகிறோம்.

இதன்படி, கோயம்பேடு, பட்ரோடு, பூந்தமல்லி பைபாஸ், சோழிங்கநல்லுார், சிறுசேரி, போரூர், திருமங்கலம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் 10 ஏக்கருக்கும் அதிகமான இடங்களை தேர்வு செய்து, இறுதி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன என தெரிவித்தனர்.