சென்னை

மாநில மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வு நடத்தக் கோரிய வழக்கில் மத்திய அரசு 8 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் உத்தரவிட்டுள்ளது.

ஐ ஏ எஸ், ஐ பி எஸ், உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வை யு ப் எஸ் சி (மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.    தற்போது இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடக்கின்றன.   இதனால் பல மாணவர்களால் தேர்வு எழுத முடியாத நிலை உண்டாகிறது.

இதையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் யு பி எஸ் சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த உத்தரவிடுமாறு வழக்கு ஒறு தொடரப்பட்டது.   வழக்கு விசாரணையின் போது இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் எந்த மாநிலத்திலும் பணி அமர்த்தப்படலாம் எனவும் அதனால் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்த தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்துவது குறித்து இன்னும் 8 வாரங்களில் பரிசீலனை செய்து முடிவு செய்ய வேண்டும் என மத்திய உள்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.