சென்னை: திமுக அமைச்சர் துரைமுருகன் மீதான 2வது சொத்து குவிப்பு வழக்கிலும், அமைச்சர் துரைமுருகனை விடுவித்த கிழமை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமைச்சர் துரைமுருகன் மீதான 2007ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ள நிலையில், இடையில் வேலூர் நீதிமன்றம் அவர்களை விடுவித்து வழங்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததுடன், 6 மாதங்களுக்கு விசாரித்து தீர்ப்பு வழங்க நேற்று (ஏப்ரல் 23ந்தேதி 2025) அன்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், தற்போது துரைமுருகன் மீதான கடந்த 1996- 2001 ஆண்டு காலக்கடத்தில் அமைச்சராக இருந்தபோது சட்டத்துக்கு புறம்பாக சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றம் விடுவித்த உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததுடன், வழக்கை மீண்டும் விசாரித்து 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது நீர்வளத் துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் கடந்த 1996- 2001 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து வேலூர் கோர்ட் உத்தரவிட்டு இருந்த நிலையில் இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், துரைமுருகன் மீதான வழக்கை மீண்டும் வேலூர் கோர்ட் விசாரிக்க வேண்டும். அவரை வழக்கிலிருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்கிறேன் என்று ஏப்ரல் 23 தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் மீதான மற்றொரு சொத்து குவிப்பு வழக்கையும் ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு கோர்ட் 2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை நீதிபதி பி. வேல்முருகன் விசாரித்து துரைமுருகன் மற்றும் அவரது மனைவி தரப்பில், சொத்துக்கள் வருமான வரிக்கணக்கில் காட்டப்பட்டுள்ளன. இதையடுத்து துரைமுருகன் சார்பில் அவரது மனைவி இல்லத்தரசி வருமான ஆதாயம் இல்லை என கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆவண ஆதாரங்களை வைத்து இருவரையும் வழக்கில் இருந்து கீழ் கோர்ட் விடுவித்தது. மேலும் ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி வேல்முருகன், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்து வேலூர் சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.
மேலும் வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, தினந்தோறும் விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் வேலூர் சிறப்பு கோர்ட்க்கு உத்தரவிட்டுள்ளார்.
ரூ. 1.40 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரை முருகன் அவரது மனைவியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ரூ.3.92 கோடி சொத்து குவிப்பு வழக்கில் விடுவித்ததை நேற்று உயர்நீதிமன்ற ரத்து செய்து இருந்தது.
[youtube-feed feed=1]