சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் 5 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை  ரத்து செய்துள்ளது.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கருர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யுமாறு  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இன்று இந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது  இன்று விசாரணை முடிவில் இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

[youtube-feed feed=1]