சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி அன்று சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது, இந்த வழக்கை அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.
நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
“கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு கடந்த ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பொதுக்குழுக் கூட்டத்தில் வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டதால் முதல் பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிரான மனுவை நிலுவையில் வைக்க வேண்டிய தேவையில்லை”
என்று தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தனர் .
[youtube-feed feed=1]