சென்னை

சென்னையில் 3787 சாலைப் பணிகளை மாநகராட்சி முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை மாநகராட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்.

”சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.ஆயிரத்து 30 கோடியில் 11 ஆயிரத்து 248 சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை 3 ஆயிரத்து 877 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

115 சாலைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. 215 சாலைகளில் சீரமைப்பு பணிகள் இந்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் வழங்கல் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனாலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் கழிவுநீரை அங்குள்ள காலி மனைகளில் விடுவதால் பொதுமக்களுக்கு மிகவும் இடர்பாடுகள் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனைத்து வார்டுகளிலும் புதுப்பிக்க வேண்டிய சாலைகள் மற்றும் சீரமைப்பு தேவைப்படும் சாலைகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் மாநகராட்சி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது”

என்று.கூறப்பட்டுள்ளது.