பாலசோர்

டிசாவில்  சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குளானது.

சென்னைக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஜல்பைகுரி – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த ரயில் சென்னை நோக்கி வரும் வழியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரயில் ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ ரயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்த போது தடம் புரண்டது.  இந்த ரயில் தண்டவாளத்தை ஒட்டி இருந்த எல்க்ட்ரிக் போஸ்டில் மோதிய பிறகு தடம் புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் யாருக்கும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.  நிகழ்விடத்திற்கு ரயில்வே மூத்த அதிகாரிகள் விரைந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இங்கு மீட்பு பணிகள் தீவ்ரமாக நடைபெற்று வருகின்றன,