சென்னை:
‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிராக சென்னை போர் நினைவுச் சின்னம் முன்பு இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராணுவத்தில் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக தொடரும் போராட்டம் இதையடுத்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2வது நாளாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிராக சென்னை போர் நினைவுச் சின்னம் முன்பு இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடவும் முயற்சி செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel