கண்ணூர்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ரூ 18 லட்சம் மோசடி செய்ததாகக் கேரள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இந்திய முன்னாள் கிரிக்கெ வீரர் ஸ்ரீசாந்த் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மோசடியில் ஈடுபட்ட காரணத்தால் வாழ்நாள் இவருக்கு முழுவதும் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்து பி.சி.சி.ஐ உத்தரவிட்டது. பின்னர் 2019 ஆம் ஆண்டு இவரின் வாழ்நாள் தடை 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு தடை நிறைவடைந்தது.

தனது தடைகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் 2021ம் ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் கேரள சிறிக்கெட் சங்கம் சார்பாக விளையாடினார்.  அவர் 2021 மற்றும் 2022ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டும் இரண்டு முறையும் இவரை எந்த அணி நிர்வாகமும் தேர்ந்தெடுக்கவில்லை.

தற்போது கண்ணூரைச் சேர்ந்த சரீஷ் பாலகோபாலன் என்பவர் ஸ்ரீசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 3 பேர் மீது கேரள காவல்துறையினரிடம் பணமோசடி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்,

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தின் நண்பர்கள் ராஜிவ் குமார் (வயது 50), வெங்கடேஷ் கினி (வயது 43) ஆகியோர் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்னை அணுகினர். அவர்கள் கர்நாடக மாநிலம் கொல்லூரில் விளையாட்டு பயிற்சி மையம் துவங்க இருப்பதாகவும், அதில் ஸ்ரீசாந்த் பங்குதாரராக இருப்பதாகவும் தெரிவித்தனர் .

மேலும் அந்த விளையாட்டு பயிற்சி மையத்திற்கு நான் முதலீடு செய்தால் என்னையும் பங்குதாரராக நியமித்தாக தெரிவித்தனர்.நான் பல்வேறு தேதிகளில் ரூ.18.7 லட்சம் முதலீடு செய்தேன். இது வரை விளையாட்டு பயிற்சி மையம் தொடங்கப்படவில்லை. மேலும் பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வருகின்றனர்”’ 

 என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஸ்ரீசாந்த் மற்றும் அவரின் நண்பர்கள் மீது ஐபிசி பிரிவு 420ன் கீழ் ஏமாற்றுதல் மற்றும் பணமோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.