சென்னை

செண்டிரல் மற்றும் அரக்கோணம் இடையில் மின்சார ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு, ஆவடி செல்லும் மின்சார ரெயில் வில்லிவாக்கத்தில் இருந்து விரைவு பாதை வழியாக இயக்கப்படும்.

இந்த ரெயில் இன்று(புதன்கிழமை) முதல் வரும் 23-ந் தேதிவரை (17-ந் தேதி தவிர) கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அன்னனூர் ரெயில் நிலையங்களில் நிற்காது.”

என்று கூறப்பட்டுள்ளது.