ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆராயச்சென்றுள்ள சந்திரயான்3 விண்கலம், அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. அதனுடன் இணைந்துள்ள ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூல் பிரித்து,  தனித்தனி பயணங்களுக்கு தயாராகி வருவதால், அதை தனித்தனியாக பிரிக்கும்பணி நாளை நடைபெற உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஜூலை 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவில் விண்கலத்தின் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்3 நிலவின் சுற்றுவட்ட பாதை உயரம் 4வது முறையாக குறைக்கப்பட்டு 100 கிலோ மீட்டர் தொலைவிலான சந்திர அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனதமாஒன இஸ்ரோ தெரிவித்து உள்ளது. யாரும் சென்றிராத நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தில் ஈடுபட்டு உள்ள இஸ்ரோ, இன்று (ஆகஸ்ட். 16) நடத்தப்பட்ட 4வது கட்ட நகர்வின் மூலம் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டபாதைக்கு நெருக்கமாக 153 கிலோ மீட்டர் X 163 கிலோ மீட்டர் வேகத்தில் முன்னேற்றி செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளன

நாளை (ஆகஸ்ட் 17 ஆம் தேதி) சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து புரபல்சன் உந்துவிசை தொகுதி மற்றும் லேண்டர் தனியாக பிரித்து பயணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.  அதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ள அடுத்த முயற்சியில் நிலவுக்கும், சந்திரயான் 3 விண்கலத்திற்கும் இடையிலான தூரம் இன்னும் குறைக்கப்படும் என்றும் புரபல்சன் உந்துவிசை தொகுதி மற்றும் லேண்டர் கருவி தனித்தனியாக பிரிக்க உள்ளதாகவும் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

அடுத்த கட்டமாக சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்த் புரபல்சன் உந்துவிசை தொகுதி மற்றும் விக்ரம் லேண்டர் கருவியை தனித் தனியாக பிரித்து நிலவில் தரையிறக்க தேவையான முயற்சி மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இத்துடன், சந்திரனைக் கட்டுப்படுத்தும் சூழ்ச்சிகள் நிறைவடைகின்றன.

ப்ராபல்ஷன் மாட்யூல் மற்றும் லேண்டர் மாட்யூல் ஆகியவை தனித்தனி பயணங்களுக்கு தயாராகி வருவதால், தயாரிப்புகளுக்கான நேரம் இது என தெரிவித்துள்ள இஸ்ரோ,  ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூலைப் பிரிப்பது ஆகஸ்ட் 17, 2023 அன்று திட்டமிடப்பட்டுள்ளது என்று டிவிட் செய்துள்ளது.