ஐதராபாத்,

ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மகனின் சொத்து மதிப்பு 5 மாதங்களில் 23 மடங்கு அதிகரித்து இருக்கிறது. இது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வருபவர் சந்திரபாபு நாயுடு. அவரது மகன் நர லோகேஷ். அவரது மகனை தெலுங்குதேச கட்சி பொதுச்செயலாளராக ஏற்கனவே சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் ஆந்திர மாநில சட்டமன்ற மேலவை தேர்தலில் போட்டியிடுகிறார். இதன் காரணாக அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனது சொத்து குறித்து அறிவித்து உள்ளார்.

வேட்புமனுவுடன்  தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், லோகேஷின் சொத்து மதிப்பு, 330 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன், அவர் அறிவித்திருந்த சொத்து மதிப்பைவிட, தற்போது குறிப்பிட்ட சொத்து மதிப்பு  23 மடங்கு அதிகம் உள்ளது.

 

கடந்த ஆண்டு, அக்டோபரில், வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டும் நோக்கில், தன் சொத்து பற்றிய அறிவிப்பை, லோகேஷ் வெளியிட்டார்.

அதில், 14.50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே தனக்கு இருப்பதாக, லோகேஷ் குறிப்பிட்டிருந்தார். அந்த அறிவிப்பில், 6.35 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், தற்போது தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் 330 கோடி ரூபாய் சொத்து மதிப்பு என்று குறிப்பிட்டுள்ளது ஆந்திர அரசியல் மட்டுமின்றி பொதுமக்களையும்  ஆ……….வென்று வாயை பிளக்க வைத்துள்ளது.

5 மாதங்களின் ஒருவரின் சொத்துமதிப்பு 23 மடங்கு உயர்ந்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறப்படுகிறது.