சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்த்ன் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

”இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதாவது கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.