திருச்சி:

திருச்சியில் பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டம் இல்லாததால் நாற்காலிகள் காலியாக கிடந்தன.

திருச்சியில் இன்று பாஜக சார்பில் நீட் ஆதரவு பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. நேற்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் நடந்த நீட் எதிர்ப்பு பொதுக்கூட்ட மைதானமான அண்ணா நகர் உழவர் சந்தை திடலில் நடக்கிறது.

இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பேசுகின்றனர்.

பொதுக்கூட்டதுக்கு மக்கள் மத்தியில் போதுமான ஆதரவு இல்லை. இதனால் பொதுக்கூட்ட பார்வையாளர் மாடத்தில் இருந்த பெரும்பாலான நாற்காலிகள் காலியாக கிடந்தன.