டில்லி

த்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைவு ரயில்களின் வேகம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வகையான பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் சராசரி வேகம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சிவதாசன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார்.

அந்த பதிலில் அமைச்சர்,

“கடந்த 2019-20-ம் ஆண்டில் சரக்கு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 23.6 கிமீ ஆகும். இது வரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.   

கடந்த 2019-20 ஆம் ஆண்டில் பயணிகள், விரைவு ரயில்களின் வேகம் மணிக்கு 50.6 கி.மீ ஆக இருந்தது.  தற்போடு அதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு 2023-24-ல் (நவம்பர் வரை) மணிக்கு 51.1 கிமீ வேகமாக உள்ளது. 

மேலும் சாதாரண ரயில்களும் 2019-20-ல் மணிக்கு 33.5 கிமீ வேகத்தில் இருந்து 2023-24-ல் 35.1 ஆகச் சிறிய முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளன.” 

என்று தெரிவித்தார்.