டில்லி

போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களைப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைத்துள்ளது.

பாஜக அமைச்சரும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இதையொட்டி பிரிஜ்பூஷண் சரன்சிங் மீது போக்சோ உள்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாலியல் வழக்கு தொடர்பாக பிரிஜ்பூஷணிடம் டெல்லி காவல்துறை இதுவரை 2 முறை விசாரணை நடத்தியும் இதுவரை சரன்சிங் கைது செய்யப்படவில்லை.  பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ்பூஷணை கைது செய்ய வேண்டும் எனக் கூறி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் நாட்டுக்காக வாங்கிய பதக்கங்களைக் கங்கை நதியில் வீச முயன்றனர். ஆனால், விவசாய சங்கத்தினர் தலையிட்டு பதக்கங்களைக் கங்கையில் வீசும் முயற்சியைத் தடுத்து நிறுத்தினர்.

மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரச்சினைகள் தொடர்பாக மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது எனவும் மல்யுத்த வீரர், வீராங்கனை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தாம்  அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.