டில்லி

த்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜி 20 நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளார்.

நாளை அமெரிக்காவில் ஜி 20 நிதி அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது.     இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 130 நாடுகளின்   நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்து கொள்கின்றனர்.   இந்த மாநாட்டில் சர்வதேச வரிவிதிப்பு முறையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் இருந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதில் கலந்துக் கொள்கிறார்.  இதையொட்டி நேற்று அவர் 4 நாட்கள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.   இந்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் தனது அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில்,

சர்வதேச நிதியம், உலக வங்கி, ஜி-20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டங்களின் ஆண்டு இறுதி கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். இந்த அரசு முறைப் பயணத்தின் போது, இந்தியா-அமெரிக்கா பொருளாதாரம், நிதி சார்ந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வார்’

என தெரிவிக்கப்பட்டுள்ளது.