டெல்லி: நாடு முழுவதும்  அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், ஏப்ரல் 1 முதல்  (2026)  பொதுமக்கள் ஆன்லைமூலம் தங்களது  சுயவிவரங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பு பணியில் சுமார் 31 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

ஏப்ரல் 1 முதல் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையதளம் வாயிலாக விவரங்களைப் பதிவு செய்யும் ‘சுய-கணக்கெடுப்பு’ முறை தொடங்குகிறது.  இந்தக் கணக்கெடுப்பு முதன்மையாக ஒரு மொபைல் செயலியைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் நடத்தப்படும், மேலும் முதல் முறையாக ஒரு வலைத்தளம் மூலம் சுய-கணக்கெடுப்பு விருப்பத்தையும் வழங்கும்.

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 16 முதல் கணக்கெடுப்பு அதிகாரிகள் நேரில் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரிப்பார்கள்.

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் வரும் புதன்கிழமை (ஏப்ரல் 1) தொடங்க உள்ள நிலையில், சாதி வாரிக் கணக்கெடுப்பு இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கீட்டின் (Population Enumeration) போது நடத்தப்படும் என்று மத்திய அரசு  அறிவித்துள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியாவின் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஏப்ரல் 1, 2026 அன்று ‘டிஜிட்டல் சுய-பதிவு’ (digital self-enumeration) முறையுடன் தொடங்கவுள்ளது; இதன் இரண்டாம் கட்டத்தில் முறையான சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. முதல் கட்டம் (வீட்டுப் பட்டியல் தயாரித்தல்) ஏப்ரல் முதல் செப்டம்பர் 2026 வரை நடைபெறும்; அதேவேளையில் இரண்டாம் கட்டம் (மக்கள் தொகை கணக்கெடுப்பு) சாதி உள்ளிட்ட தனிநபர் விவரங்களைச் சேகரிக்கும், இதற்கான இறுதித் துல்லியத் தேதி (reference date) மார்ச் 1, 2027 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக,  2026, மார்ச் 30 அன்று டெல்லியில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண், இந்த தேசிய அளவிலான பணியின் இரு கட்டம் குறித்து விளக்கினார்:

முதல் கட்டம் (வீடுகள் கணக்கெடுப்பு): ஏப்ரல் 1 – செப்டம்பர் 2026.
சுய-பதிவு தொடக்கம்: ஏப்ரல் 1, 2026 அன்று பல மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (எ.கா., டெல்லி, கோவா, கர்நாடகா) தொடங்குகிறது; மற்ற இடங்களுக்கு வெவ்வேறு கால அட்டவணைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதில் வீட்டின் நிலை, குடும்ப விவரங்கள், குடிநீர், கழிப்பறை, மின்சாரம், சமையல் எரிபொருள், இணையம் போன்ற வசதிகள் மற்றும் ரேடியோ, டிவி, கணினி, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் போன்ற சொத்துக்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.

இரண்டாம் கட்டம் (மக்கள் தொகை கணக்கீடு):

‘2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளது; இதற்கான குறிப்புத் தேதியாக மார்ச் 1, 2027 அன்று நள்ளிரவு 00:00 மணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரம்பு: 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், 784 மாவட்டங்கள் மற்றும் 6.39 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை இது உள்ளடக்கி யுள்ளது.

பாதுகாப்பு: சேகரிக்கப்படும் தனிப்பட்ட தரவுகள் ரகசியமானவை; ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ (Times of India) இதழின் செய்தியின்படி, இத்தரவுகள் ஒட்டுமொத்த புள்ளிவிவர நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

NPR புதுப்பிப்பு: இந்த கணக்கெடுப்புப் பணியின்போது, ​​தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) புதுப்பிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதில் நபர்களின் எண்ணிக்கை, பெயர், வயது, பாலினம், திருமண நிலை, சாதி, மதம், கல்வி, மொழி, ஊனம், இடம்பெயர்வு, தொழில் மற்றும் திருமணமான பெண்களின் மகப்பேறு விவரங்கள் சேகரிக்கப்படும்.

“சாதி வாரிக் கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டத்தின் போது செய்யப்படும்,” என்று நாராயண் கூறினார். முதல் கட்டத்திற்கான வினாக்கள் இந்த ஆண்டு ஜனவரி 22 அன்று அறிவிக்கப்பட்டன, இரண்டாம் கட்டத்திற்கான கால அட்டவணை மற்றும் வினாப்பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்றும்  தெரிவித்தார்.

ஏப்ரல் 1 முதல் சுய-கணக்கெடுப்பு

ஏப்ரல் 1 முதல் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையதளம் வாயிலாக விவரங்களைப் பதிவு செய்யும் ‘சுய-கணக்கெடுப்பு’ (Self-enumeration) முறை தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 16 முதல் கணக்கெடுப்பு அதிகாரிகள் நேரில் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரிப்பார்கள். 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 30 நாட்களில் முதல் கட்டப் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 784 மாவட்டங்கள் மற்றும் சுமார் 6.4 லட்சம் கிராமங்களை இந்தக் கணக்கெடுப்பு உள்ளடக்கும்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) புதுப்பிப்பது குறித்துக் கேட்டபோது, தற்போது வரை அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நாராயண் பதிலளித்தார்.

மேற்கு வங்க அரசு இன்னும் கணக்கெடுப்பு அறிவிப்பை வெளியிடாதது குறித்துப் பேசிய அவர், “மேற்கு வங்கம் இன்னும் அறிவிப்பை வெளியிடவில்லை. இது குறித்து அவர்களுடன் ஆலோசித்து வருகிறோம். சட்டப்பூர்வத் தேவையான இந்த அறிவிப்பை அந்த மாநிலம் வெளியிடும் என்று நம்புகிறோம். முதல் கட்டத்திற்கு 2026 செப்டம்பர் வரை எங்களுக்கு அவகாசம் உள்ளது,” என்றார்.

இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் 69-வது வரிசையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் (Union Subject) உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 16 அன்று, 2027 கணக்கெடுப்பை நடத்தும் தனது விருப்பத்தை அறிவித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் (RGI) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மார்ச் 1, 2027 கணக்கெடுப்புத் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், லடாக், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் பனிப்பொழிவு உள்ள பகுதிகளுக்கு அக்டோபர் 1, 2026 கணக்கெடுப்புத் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அணுகுமுறையானது, டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் தரவு சேகரிப்பு செயல்முறையைச் சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாட்டின் பதிவாளர் ஜெனரலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருமான மிருதுஞ்சய் குமார் நாராயண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,   சுயவிவர கணக்கெடுப்பு மற்றும் வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு என 2 கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சுயவிவர கணக்கெடுப்பு நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கும் இந்த கணக்கெடுப்பு மாநிலங்கள் வாரியாக உரிய காலக்கெடுவில் நடத்தப்படுகிறது.

அந்தமான் நிக்கோபார் தீவுகள், டெல்லி மாநகரப்பகுதி மற்றும் டெல்லி கண்டோன்மென்ட் போர்டு, கோவா, கர்நாடகம், லட்சத்தீவு, மிசோரம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில் நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை சுய விவர கணக்கெடுப்பும், ஏப்ரல் 16-ந்தேதி முதல் மே 15-ந்தேதி வரை வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பும் நடத்தப்படும்.

ல் ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் புதுச்சேரியில் மே மாதம் 17-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சுயவிவரக் கணக்கெடுப்பும், ஜூன் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பும் நடைபெறுகிறது.

மேற்கு வங்காளத்தில் கணக்கெடுப்புக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஜார்கண்ட் மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்துவதற் கான நோட்டீஸ் தற்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின் அனைத்து பணிகளையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணியில் சுமார் 31 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு கூறினார்.

[youtube-feed feed=1]