டெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026ஆம் ஆண்டு நடைபெறவிருந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக மார்ச் 3ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் 2026 திருத்தப்பட்ட தேதிகள் அனுமதிச் சீட்டுகளிலும் பிரதிபலிக்கும் என்றும், பள்ளிகள் அதற்கேற்ப தங்கள் உள் தேர்வு அட்டவணைகளைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 12ஆம் வகுப்பில் மார்ச் 3ஆம் தேதி சட்டப் படிப்பு (Legal Studies) தேர்வு ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், 10ஆம் வகுப்புத் தேர்வு: மார்ச் 3ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு மார்ச் 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புத் தேர்வு: மார்ச் 3ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஏப்ரல் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
எந்தெந்தத் தேர்வுகள் ஒத்திவைப்பு?
10ஆம் வகுப்பில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளில் திபெத்தியம், ஜெர்மன், தேசிய மாணவர் படை (NCC), போடி, போடோ, டாங்க்கல், ஜப்பானீஸ், பூடியா, ஸ்பானிஷ், காஷ்மீரி, மிசோ, பஹாசா மலே, எலிமென்ட்ஸ் ஆஃப் பிசினஸ், மற்றும் எலிமென்ட்ஸ் ஆஃப் புக் கீப்பிங் மற்றும் அக்கவுண்டன்சி ஆகிய பாடங்கள் அடங்கும்.
12ஆம் வகுப்பில் மார்ச் 3ஆம் தேதி சட்டப் படிப்பு (Legal Studies) தேர்வு நடைபெறவிருந்தது. இது தற்போது ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிற தேதிகளில் மாற்றம் இல்லை
இந்தத் தேர்வுகள் தவிர, மற்ற அனைத்து தேர்வு தேதிகளிலும் எந்த மாற்றமும் இல்லை என்று சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் தகவலை மாணவர்களும் பெற்றோர்களும் கவனத்தில் கொள்ளுமாறு பள்ளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
10ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் மார்ச் 18 வரை நடைபெறும்.
12ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10 வரை (முன்பு ஏப்ரல் 4 வரை இருந்தது) நடைபெறும்.
அனைத்துத் தேர்வுகளும் காலை 10:30 மணிக்கு ஒரே ஷிஃப்டில் தொடங்கும். இந்த ஆண்டு சுமார் 45 லட்சம் மாணவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 204 பாடங்களுக்கான தேர்வுகளை எழுத உள்ளனர்.
இரண்டு கட்டத் தேர்வு முறை (Twin Board Exams)
இந்த ஆண்டு 10ஆம் வகுப்புத் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன:
முதல் கட்டத் தேர்வு: பிப்ரவரி 17 முதல் மார்ச் 6, 2026 வரை நடைபெறும். (இது கட்டாயம்)
இரண்டாம் கட்டத் தேர்வு: மே 15 முதல் ஜூன் 1 வரை நடைபெறும். (இது விருப்பத்தேர்வு, மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும்)
இரண்டு கட்டத் தேர்வுகளிலும் அதிகபட்ச மதிப்பெண் எதுவோ, அதுவே இறுதி மதிப்பெண் பட்டியலில் சேர்க்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 10 அன்றும், 12-ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 9 அன்றும் முடிகின்றன. நாடு முழுவதும் சுமார் 45 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ‘இரட்டைப் பொதுத்தேர்வு’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாணவர் முதல் தேர்வில் தோல்வியடைந்தாலோ அல்லது குறிப்பிட்ட பாடங்களில் மதிப்பெண்களை உயர்த்த விரும்பினாலோ, இரண்டாவது தேர்வில் பங்கேற்கலாம். இது மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, ஒரு கல்வியாண்டு வீணாவதைத் தவிர்க்கவும். உதவும்.
பாடவாரியானமாற்றங்கள்
10ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களின் வினாத்தாள்கள் இனி தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
- அறிவியல்: உயிரியல், வேதியியல், இயற்பியல் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
- சமூக அறிவியல்: வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் என நான்கு பிரிவுகளாக இருக்கும். இது மதிப்பீட்டு முறையை எளிதாக்க உதவும்.
புதியவினாத்தாள்அமைப்பு
2026ஆம் ஆண்டு தேர்வில் 50 சதவீதக் கேள்விகள் மாணவர்களின் சிந்திக்கும் திறன் மற்றும் பாடத்தைப் புரிந்து பயன்படுத்தும் திறனை சோதிக்கும் வகையில் இருக்கும். 20 சதவீத கேள்விகள் பலவுள் தெரிவு வினாக்களாகவும், மீதமுள்ள 30 சதவீத கேள்விகள் சிறு மற்றும் பெரு வினாக்களாகவும் அமையும். மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து, புரிதலுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதே இதன் நோக்கமாகும்.
வருகைப்பதிவுமற்றும்அகமதிப்பீடு
மாணவர்கள் தேர்வெழுதத் தகுதி பெற 75% வருகைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 1, 2026 முதல் தொடங்கும் செய்முறைத் தேர்வுகள் மற்றும் அக மதிப்பீடுகளில் (Internal Assessment) பங்கேற்பது அவசியம். இதில் பங்கேற்காத மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் மாணவர்களின் எதிர்காலப் போட்டித் தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று சிபிஎஸ்இ தெளிவுபடத் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]