டெல்லி:  நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா, நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்ப  தனியார் நிறுவன முதலாளியிடம் பணம் பெற்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மற்றொருவர் கணக்கை பகிர்ந்த விவகாரத்தில்,  விசாரணை நடத்திய  சிபிஐ, விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

மம்தா பானர்ஜி கட்சியின் பெண் எம்.பி.யான மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான விசாரணை அறிக்கை   ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பாலிடம் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சமா்ப்பித்துள்ளது என  அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசுவதிலும், இந்திய அரசையும், பிரதமர் மோடி உள்பட பாஜகஅமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வருபவர் திரிணாமுல் பெண் எம்.பி மஹுவா மொய்த்ரா முன்னணியில் இருப்பவர். இவரது ஆவேசமான பேச்சு, அனைத்தும் பணத்துக்கு விலைபோனது என்பது தெரிய வந்தது.

துபாயை சோ்ந்த தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் பணத்தை பெற்றுக்கொண்டு திரிணாமுல் பெண் எம்.பி மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில்,   தனது மக்களவை பயனா் கணக்கு விவரங்களை பகிா்ந்து,  தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக பாஜக எம்.பி.நிஷிகாா்ந்த் துபே நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினாா்.

இதன் அடிப்படையில் நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணை நடத்தியது. அதன்பிறகு கடந்த 2023, டிசம்பரில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா மனுதாக்கல் செய்தாா். இதைத்தொடா்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகா் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட மஹுவா மொய்த்ரா பாஜக வேட்பாளா் அமித் ராயை வென்று மீண்டும் மக்களவை எம்.பி. ஆனாா்.

இதனிடையே, மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்கும் பொறுப்பை சிபிஐயிடம் லோக்பால் ஒப்படைத்தது. இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மாா்ச் 21-ஆம் தேதி மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த விசாரணை முடிவடைந்த நிலையில்,  தற்போது மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான விசாரணை அறிக்கையை லோக்பால் அமைப்பிடம் சிபிஐ சமா்ப்பித்துள்ளது.

முன்னதாக, தா்ஷன் ஹீராநந்தானியிடம் பணம் மற்றும் பரிசுகளை பெற்றுக்கொண்டு தொழிலதிபா் கௌதம் அதானி மற்றும் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக மக்களவையில் மஹுவா மொய்த்ரா பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக நிஷிகாந்த் துபே குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற மம்தா கட்சி மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு:

கேள்வி எழுப்ப லஞ்சம்: திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவிடம் அக்.31ந்தேதி விசாரணை

50 வயதான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா 65 வயதான முன்னாள் எம்.பி.யுடன் ஜெர்மனியில் ரகசிய திருமணம்