டெல்லி:  நீட் வினாத்தாள் கசிவு  குறித்து சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த மோசடிக்கு தேசிய தேர்வு முகமையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் சிலரே காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறும் சிபிஐ, இதுவரை 9 பேரை கைது செய்துள்ளது.

நாடு முழுவதும் மே மாதம 2ந்தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை  22 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் எழுதினர். ஆனால்,   நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன.  கசிந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

நடந்த நீட் தேர்வின்போது  வினாத்தாள் ராஜஸ்தான் மாநிலத்தில் கசிந்ததாகவும், லட்சக்கணக்கான ரூபாயை மாணவர்களிடமிருந்து பெற்று வினாத்தாளை விற்பனை செய்ததாகவும் சிபிஐ விசாரணையில்  தெரிய வந்துள்ளது.

முதலில் இத்தகவலை முதலில்  மறுத்த என்டிஏ, தேர்வை ரத்துசெய்வதாக மே 12 அன்று தெரிவித்தது. இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது மத்திய அரசு. இதுவரை  பேராசிரியர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில்,  தேசிய தேர்வு முகமையின் (NTA) சார்பில் தேர்வு நடைமுறைகளில் ஈடுபட்டிருந்த வேதியியல் விரிவுரையாளரான பி.வி. குல்கர்னிக்கு, வினாத்தாள்களை அணுகும் வாய்ப்பு (access) இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏப்ரல் 2026-இன் கடைசி வாரத்தில், மற்றொரு குற்றவாளியான திருமதி மனிஷா வாக்மாரியின் உதவியுடன் (இவர் மே 14, 2026 அன்று CBI-ஆல் கைது செய்யப்பட்டவர்), குல்கர்னி மாணவர்களைத் திரட்டி, புனேயில் உள்ள தனது இல்லத்தில் அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சிறப்புப் பயிற்சி வகுப்புகளின் போது, ​​பி.வி. குல்கர்னி வினாக்களையும், அதற்கான மாற்று விடைகள் மற்றும் சரியான விடைகளையும் வாய்மொழியாகக் கூறியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறிய வினாக்களை மாணவர்கள் தங்கள் குறிப்பேடுகளில் கையால் எழுதி வைத்துள்ளனர்;

இந்த வினாக்கள், மே 3, 2026 அன்று நடைபெற்ற NEET-UG 2026 தேர்வின் அசல் வினாத்தாளுடன் துல்லியமாகப் பொருந்திப் போயுள்ளன. சொந்த ஊராக லத்தூரைச் சேர்ந்த பி.வி. குல்கர்னி, தீவிர விசாரணைக்குப் பிறகு புனேயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் CBI அதிகாரிகள் சோதனை நடத்தி, குற்றத்தை நிரூபிக்கக்கூடிய ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் அலைபேசிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விரிவான தடயவியல் மற்றும் தொழில்நுட்பப் பகுப்பாய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

NEET-UG 2026 தேர்வின் வினாத்தாள் கசிவு தொடர்பாக, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையிடமிருந்து பெறப்பட்ட எழுத்துப்பூர்வப் புகாரின் அடிப்படையில், மே 12, 2026 அன்று CBI வழக்கு பதிவு செய்தது என்பதை இங்கு நினைவுகூரலாம். வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனேயே, சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. சந்தேகத்திற்குரிய நபர்கள் பலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

நேற்று வரை, ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக், புனே மற்றும் அகில்யநகர் ஆகிய இடங்களிலிருந்து ஏழு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து குற்றவாளிகள் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விரிவான விசாரணைக்காக ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு குற்றவாளிகள், ‘பயணக் காவல்’ (transit remand) பெறுவதற்காகப் புனேயில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அங்கிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் மூலம், வேதியியல் வினாத்தாள் கசிவின் உண்மையான மூலமும், மாணவர்களைத் திரட்டுவதில் ஈடுபட்ட இடைத்தரகர்களின் பங்கும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வினாக்கள் வாய்மொழியாகக் கூறப்பட்டு விவாதிக்கப்பட்ட அந்தச் சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக, மாணவர்கள் பல லட்சக்கணக்கான ரூபாயை லஞ்சமாகச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இவ்வழக்கில் ஒரு விரிவான, பாரபட்சமற்ற மற்றும் தொழில்முறை சார்ந்த விசாரணையை மேற்கொள்வதில் சிபிஐ உறுதியுடன் உள்ளது.

இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்படுவ தாகவும் ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. நீட் தொடர்பான சர்ச்சைகளுக்குத் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தை இவ்விவகாரம் உருவாக்கி இருக்கிறது.

ஏற்கெனவே, 2024இல் இதே போன்று வினாத்தாள் கசிவு விவகாரம் சர்ச்சையானது. அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட கே.ராதாகிருஷ்ணன் குழு 101 பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது. என்டிஏ மறுசீரமைப்பு, பல கட்ட நுழைவுத்தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில்,  ராஜஸ்தானில் கண்டறியப்பட்டுள்ள வினாத்தாள் கசிவு விவகாரம், அந்தப் பரிந்துரைகள் எந்த அளவுக்குச் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்னும் கேள்வியை எழுப்புகிறது. தூக்கம், ஓய்வு, கேளிக்கையைப் புறந்தள்ளிவிட்டு, பல மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளப் பயிற்சியெடுத்து வருகின்றனர்.

புனேவைச் சேர்ந்த தாவரவியல் பேராசிரியரான மனிஷா குருநாத் மந்தாரே நேற்று கைது செய்யப்பட்டார். மந்தாரே முன்னதாகவே தேர்வு எழுத இருந்த மாணவர்களை தனது இல்லத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் வரவழைத்து அனைத்து ஆலோசனைகளையும் வழங்கியதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியே வர உள்ளன என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]