ரூர்

திமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் நடந்த ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதி அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நேற்று இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எனவே கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனை விஜயபாஸ்கரின் வீடு, நிறுவனங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனையில் 2 டி.எஸ்.பிக்கள், 9 ஆய்வாளர்களை கொண்ட குழு ஈடுபட்டுள்ளது. எம் ஆர் விஜயபாஸ்கர் நில அபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்

இந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் இடங்களில் எற்கனவே சோதனை நடைபெற்றது. தற்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடமும் சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.