சென்னை

ள்ளக்குறிச்சி விஷ சாராயம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுளது

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி அதிமுக, பாமக மற்றும் பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது இந்த வழக்கில் அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பித்துள்ளது.

உயர்நீதிமன்றம் அனைத்து மனுதாரர்களுக்கும் இது குறித்த அறிக்கை மற்றும் பதில் மனு தர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.