ஜெய்பூர்:
ர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான கியான் தேவ் அஹூஜா, ”பசுவதையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொன்று விடுங்கள்” என்று பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் கியான் தேவ் அஹூஜா மேலும் கூறுகையில், ”இதுவரை நாங்கள் ஐந்து பேரை கொலை செய்து இருக்கிறோம். எந்த தயக்கமும் இன்றி சுதந்திரமாக கொலை செய்ய நான் அனுமதி கொடுத்துள்ளேன். அவர்களுக்கு ஜாமீனையும் விடுதலையும் நாங்கள் பெற்று தருகிறோம்” என்று பேசுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில், கியான் தேவ் அஹூஜாவுக்கு எதிராக153 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.