சென்னை :  2026  சட்டசபை தேர்தலில், அண்ணாமலை போட்டியிட்டு ‘டெபாசிட்’ வாங்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் சேகர்பாபு, அதற்ன பணியை இப்போதே அவர்  துவங்கட்டும்,” என  கூறினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை ஓட்டேரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, குழந்தைகள் காப்பகம் மற்றும் 10 கருணை இல்லங்களில் நடைபெடறறது.  அதைத்தொடர்ந்து சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள , பெரவள்ளூர் – ஜெயின் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சியில் 435 கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை கழக துணைப் பொதுச் செயலாளர்   கனிமொழி, கழக மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் பங்கேற்று வழங்கி சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் பிரியா கலாநிதி வீராசாமி எம்.பி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

இந்த நிகழ்ச்சியில் பேசிய சேகர்பாபு,   லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்று காட்டிவிட்டோம். அடுத்து நம் இலக்கு 2026 சட்டசபை தேர்தல் தான். இன்று முதல், அதற்கான பணிகளை துவங்க வேண்டும். தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கொள்கையின் அடிப்படையிலேயே, துாத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழிக்கு ஓட்டுகள் கிடைத்ததே தவிர, கருணாநிதியின் மகள் என்பதற்காக இல்லை. இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நான் உட்பட மற்ற அமைச்சர், மேயர் என அனைவரும், தலைவரின் உடன்பிறப்புகள் போல் குடும்பமாக செயல்படுகிறோம். தமிழகத்தில் 12 இடங்களில் பா.ஜ., இரண்டாவது இடம் பிடித்துள்ளது பற்றி, அ.தி.மு.க., தான் யோசிக்க வேண்டும்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப பேசக்கூடியவர். நான் சவால் விட்டு சொல்கிறேன். கோவையில், அண்ணாமலை என்ற தனிமனித பேனரில் போட்டியிட்டு இருந்தால், அவர் டெபாசிட் கூட வாங்கி இருக்க மாட்டார். ஒரு கட்சியின் நிழலில் தான், அவர் போட்டியிட்டார். லோக்சபா தேர்தலைப்போல், அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அந்த தேர்தலிலும் அண்ணாமலை தனித்து போட்டியிடட்டும். டிபாசிட் தொகையை தக்கவைக்க இப்போதே அவர் பணியை துவங்கட்டும்.

இவ்வாறு பேசினார்.