சென்னை

ரும் 2040க்குள் சென்னையின் 7% நிலப்பரப்பு கடலில் முழ்கும் அபாயம் உள்ளதாக சி எஸ் டி இ பி ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

கடல் நீர் மட்டம் காலநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல் போன்றவற்றால் உயர்ந்து வருகிறது. எனவே, உலகம் முழுவதும் கடலோர நகரங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். வரும் 2040 -ஆம் ஆண்டு வாக்கில் கடல் மட்டம் உயர்ந்து சென்னையின் ஏழு சதவீதம் நிலப்பரப்பு கடலில் மூழ்கும் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் தனது ஆய்வரிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனால் சென்னை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவு திடல், குடியரசு பொன் விழா நினைவு தூண், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் கடல் மட்ட உயர்வால் மூழ்கும் அபாயம் உள்ளது என்று சிஎஸ்டிஇபி எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள 570 நகரங்களில் உள்ள சில நிலப்பரப்புகள் கடலில் மூழ்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னைக்கும் அந்த ஆபத்து இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த.1987 முதல் 2021 வரையில் சென்னையில் கடல் மட்டம் 0.679 செ.மீ. உயர்ந்துள்ளதாகவும், வருடாந்திர உயர்வு 0.066 செ.மீ. என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மும்பையில் கடந்த 30 ஆண்டுகளில் அதிகபட்ச கடல் மட்ட உயர்வு ஏற்பட்டுள்ளது.  மேலும் தூத்துக்குடியில் உள்ள தொழிற்பேட்டைப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொள்ள உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.