பிரேசிலியா: பிரேசில்  நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி இருக்கிறது.

பிரேசிலில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி உள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: 24 மணி நேரத்தில் புதிதாக 51,879 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒட்டு மொத்த எண்ணிக்கை 1,0030,626 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு இன்று மேலும் 1,367 பேர் பலியாகினர். ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 243,457ஆக உயர்ந்து உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.