அண்மையில் ரஜினி அரசியல் வருகை குறித்து அறிவித்தார்.

டிசம்பர் 31-ல் தேதி அரசியல் கட்சி அறிவிக்கப்படும் என்றும், ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும் பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து அவரின் அரசியல் வருகையை உறுதி செய்தார்.

இந்நிலையில் தற்போது ரஜினி பெங்களூர் சென்று அவரது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அரசியல் என்ட்ரியை அறிவித்தவுடன், முதல்கட்டமாக தனது அண்ணனை சந்தித்து ரஜினிகாந்த் ஆசி பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.