பீட், மகாராஷ்டிரா

ங்கிக் கடன் பாக்கி வைத்துள்ள பாஜக தேசிய செயலர் பங்கஜா முண்டேவின் ச்ர்க்கரை ஆலை ஏலத்துக்கு வந்துள்ளது.

இன்று மத்திய அரசின் யூனியன் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ரூ.203.69 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பாக்கியை வசூலிக்க,மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள பாஜக தேசிய செயலர் பங்கஜா முண்டே குடும்பத்திற்குச் சொந்தமான கூட்டுறவு சர்க்கரை ஆலை ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 25 ஆம் தேதி  இதற்கான மின்-ஏலம் நடைபெறும் என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஏல நடவடிக்கையை யூனியன் வங்கியின் அகமது நகர் அலுவலகம், ரூ.203.69 கோடி மதிப்பிலான கடன் பாக்கிகளை வசூலிக்க எடுத்துள்ளது.

பங்கஜா முண்டே இது குறித்து,

“என்னுடைய தந்தையும் மறைந்த பாஜக தலைவருமான கோபிநாத் முண்டே, கடினமான சூழலுக்கு இடையே இந்த ஆலையை தொடங்கினார். ஆலையைப் பல கஷ்டங்களையும் மீறி நான் நடத்தி வந்தேன். ஆலையில் நிலைமை கொரோனா காலகட்டத்தில் மிகவும் கடினமாகி விட்டதால் ஆலை வங்கியின் வசம் உள்ளது”

என்று கூறி உள்ளார்.