கர்தலா

திரிபுரா  மாநில சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆபாச படம் பார்த்ததை எதிர்த்த சட்டமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் திரிபுரா மாநிலமும் ஒன்றாகும்.  இங்கு கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை நிதிநிலை கூட்டத்தொடரின் கடைசி நாளில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர். ஜடாப் லால் நாத், தனது கைப்பேசியில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டமன்ற உறுப்பினர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி வந்தது  ஆயினும், விசாரணை நடத்தினால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என சபாநாயகர் விஸ்வபந்து சென் கூறினார்.

இன்று திரிபுரா சட்டசபையில் படஜெட் கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர். செல்போனில் ஆபாசப் படம் பார்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர், பல்வேறு முக்கிய பிரச்சனைகள் இருப்பதால் அவர்களது இருக்கையில் சென்று அமரும்படி கூறினார். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் 5 சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.