டில்லி

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட 7 மத்திய அமைச்சர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.

 

வரும் 27ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாகும் 56 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்றுடன் இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். மேலும் குஜராத்தில் இருந்து பாஜக தலைவர் நட்டா போட்டியிடுகிறார் .

தற்போது காலியாகும் 56 இடங்களில் 28 இடங்கள் பாஜகவைச் சேர்ந்தது ஆகும்.  இவ்வாறு பதவிக்காலம் காலியாகும் 28 பேரில் 4 பேருக்கு மட்டுமே மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இவர்களில் 2 பேர் மத்திய அமைச்சர்கள் ஆவார்.

அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன் ஆவார் . இவருக்கு மத்தியப் பிரதேசத்தில் இருந்து போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்தவர் அஸ்வினி வைஷ்ணவ ஆவார். ஒடிசாவில் இருந்து மீண்டும் போட்டியிடும் இவர் வெற்றி பெறும் அளவுக்கு அந்த மாநிலத்தில் பாஜகவுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள். இல்லை. என்றாலும் ஆளும் பிஜு ஜனதாதளம் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அங்கு போட்டியிடுகிறார்.

இவ்விரு மத்திய அமைச்சர்கள் தவிர மேலும் 7 மத்திய அமைச்சர்களின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஏப்ரல் மாதம் காலியாகிறது.

அது குறித்த விவரம் வருமாறு:-

1) சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா (குஜராத்)

2) மீன்வள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா (குஜராத்)

3) தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர்(கர்நாடகம்)

4)சிறு தொழில் துறை அமைச்சர் நாராயண்ரானே(மகராஷ்டிரா)

5) வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் (மகராஷ்டிரா)

6) சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் (ராஜஸ்தான்)

7) கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் (ஒடிசா)