டெல்லி

தேர்தல் வாய்ப்பு கிடைக்காததால் பீகார் மாநிலம் முசாப்பர்பூர் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அஜய்குமார் காங்கிரஸில் இணைந்துள்ளார். 

தற்போது பீகாரின் முசாபர்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அஜய் குமார் நிஷாத் பாஜக வில் இருந்து 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுள்ளார்ட இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட அஜய்க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ராஜ் பூஷண் நிஷாத்துக்கு சீட் வழங்கப்பட்டது.

அஜய் பா.ஜ.க.வில் இருந்து விலகி இன்று காங்கிரசில் இணைந்துள்ளார். இன்று பீகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், பீகாரின் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வகிக்கும் மோகன் பிரகாஷ், கிஷன்கஞ்ச் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். முகமது ஜாவித் மற்றும் காங்கிரசின் ஊடகம் மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன் கேரா முன்னிலையில் அவர், காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அப்போது அஜய் செய்தியாளர்களிடம்,

”தூக்கில் போடப்படும் நபருக்குக் கூட கடைசி ஆசை என்னவென கேட்கப்படும். ஆனால், எனக்கு சீட் கிடையாது என முடிவானதற்கு முன் ஒரு முறை கூட அதுபற்றி என்னிடம் எதுவும் கூறவில்லை/  என்னைச் சேர்த்துக் கொண்ட காங்கிரஸ் தலைமைக்கு நன்றி,  இம்முறை பணபலத்திற்கான தேர்தலாக இல்லாமல் மக்களின் பலத்திற்கான தேர்தலாக இருக்கும்” 

என்று கூறியுள்ளார்.