தென்காசி

டும் வெள்ளம் காரணமாக மூன்றாம் நாளாக இன்றும் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது  குற்றாலத்தில் சீசன் காலம் என்பதால் இங்குள்ள அருவிகளில் குளிக்க தினமும் ஏராளமாக சுற்றுலா பயணிகள் வந்து அருவிகளில் மகிழ்ச்சியுடன் குளித்து சென்கிறார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

எனவேகுற்றாலம் அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். காவல்துறையினர் இப்பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.