ஷேக் ஹசீனா வெளியேற்றப்பட்ட பின்னர் வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் முகமது யூனுஸ், சீனாவுக்குப் பயணம் செய்யத் தயாராகி வருகிறார்.

முகமது யூனுஸ் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சீனாவுக்கு விஜயம் செய்வார் என்று அரசாங்க தலைமை செய்தித் தொடர்பாளர் ஷஃபிகுல் ஆலம் தெரிவித்தார்.

சீனா-வங்காளதேச உறவுகளை வலுப்படுத்த இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தை உற்பத்தி மையமாக மாற்ற சீனாவுடன் முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

மார்ச் 27 ஆம் தேதி பெய்ஜிங்கில் நடைபெறும் போவா ஆசிய மன்றம் (BFA) மாநாட்டில் யூனுஸ் பங்கேற்பார். இந்த மாநாட்டில் 27 நாடுகள் பங்கேற்கும் என்று அவர் விளக்கினார்.

மார்ச் 28 ஆம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை யூனுஸ் சந்திப்பார். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் வளர்ச்சியைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல உதவும் என்று அவர் கூறினார்.

வங்கதேசத் தலைவர்களை வரவேற்க சீன அதிபர் அலுவலகம் ஆர்வமாக இருப்பதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.