துபாய்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 169 ரன்களை எடுத்துள்ளது பெங்களூரு அணி.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தேவ்தத் படிக்கல் 34 பந்துகளில் 33 ரன்கள் மட்டுமே அடித்தார். ஷிவம் துபே 14 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே அடிக்க, கேப்டன் விராத்  கோலி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டனர்.
52 பந்துகளை சந்தித்த அவர் 4 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 90 ரன்களை அடித்தார். அதன்மூலம் அணியின் ரன் எண்ணிக்கை 169 என்ற அளவிற்கு உயர்ந்தது. இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது.
சென்னை அணி சார்பில் சாம் குர்ரன் 4 ஓவர்களில் அதிகபட்சமாக 48 ரன்களை வாரி வழங்கினார்.
இன்றைக்காவது சென்னை அணி இலக்கை தொட்டு வெற்றி பெறுமா? அல்லது தோல்வியை தழுவி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழக்குமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.