மதுரை: மதுரையில் திமுக பிரமுகர் ஒருவர் பேக்கரியில் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, தாக்குதல் நடத்திய மதுரை திமுக பிரமுகர் பிரகாசம் கட்சியிலிருந்து நீக்கி திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகரின் பேக்கரியை திமுக துணை மாணவரணி செயலாளர் பிரகாசம் என்பவர் அடித்து நொறுக்கினார். தேர்தல் முன்பகை காரணமாக இந்த தாக்கதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஊரங்கு நேரத்தில், கையில் ஆயுதங்களுடன் அந்த பேக்கரி வாசலில் நுழைந்து   அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேக்கரியில் போடப்பட்டிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் பேக்கரியில் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசி சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அந்த பேக்கரியின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலானது.

இதுதொடர்பான புகாரின் பேரில்,  சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர்  குற்றச்செயலில் ஈடுபட்ட அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த பேக்கரி அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி போரூர் செயலாளர் பிரகாசம் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்த நிலையில், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் பிரகாசம் நீக்கப்பட்டுள்ளார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.