லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதியின் தந்தை பிரபு தயாள் காலமானார். அவருக்கு வயது 95.

இதனையடுத்து, பல்வேறு தலைவர்களும் மாயாவதிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி.பிரியங்கா காந்தி, தொலைபேசி வாயிலாக மாயாவதியை அழைத்து, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

‍மேலும், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தனது இரங்கலை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். “தந்தையை இழந்துவாடும் மாயாவதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். பகவான் ராமர், பிரபு தாயளின் ஆன்மாவிற்கு தனது பாதத்தில் இடம் தரட்டும்” என்றுள்ளார்.

இதனோடு, உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இவரைத் தவிர, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சதீஷ் சந்திராவும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.