லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானியிடம் 24-ம் தேதியும்,  23-ஆம் முரளி மனோகர் ஜோஷியிடம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வாக்குமூலம் பெறுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்டோர் 2001ம் ஆண்டு அகமதபாத் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையிடு செய்தது. அதே நேரத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை ஆக. 31க்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  கல்யாண் சிங், உமா பாரதி ஆகியோர் நேரில் வாக்குமூலம் அளித்தனர். இந் நிலையில் முரளிமனோகர், அத்வானியை ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது. அதற்காக அத்வானியிடம் வரும் 24ம் தேதியும்,  23ம் தேதி முரளி மனோகர் ஜோஷியிடம் வீடியோகால் மூலம் வாக்குமூலம் பெறப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.