சென்னை: 89வயதான மத்தியஅரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்துள்ளது மத்தியஅரசு.

ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்து வருவபவர் கே.கே.வேணுகோபால். இவருக்கு வயது 89. இவரது பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஒரு ஆண்டு (2020) காலம் நீட்டிப்பு செய்து மத்தியஅரசு உத்தரவிட்டது. அதன்படி அவரது  பதவிக் காலம் ஜூன் 30ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், தற்போது மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி, மத்தியஅரசின்  தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் 2022ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படு உள்ளது.