டெல்லி

பாஜகவில் டெல்லி  அரசாங்கத்தை நடத்த ஆளில்லை என அதிஷி விமர்சித்துள்ளார்.

கடந்த 5-ந்தேதி நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன.

பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்று குறிப்பிடப்படாத  போதிலும் டெல்லி பொதுமக்கள் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.  இதுவரை டெல்லியின் புதிய முதல்வர் யார்? என்பது முடிவு செய்யப்படாமல் உள்ளது.

டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி,

”தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்திட்ட 10 நாட்கள் ஆகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பெயர்களை கடந்த 9ம் தேதியே பாஜக அறிவித்து, வளர்ச்சிக்கான பணிகளை தொடங்கும் என்றும் மக்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், டெல்லியில் அரசாங்கத்தை அமைத்து முறையாக நடத்த பாஜகவில் ஆட்கள் இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பாஜக எம்.எல்.ஏ.க்களில் யாரையும் பிரதமர் மோடி நம்பவில்லை. பாஜகவிடம் தொலைநோக்கு பார்வையோ திட்டமிடலோ இல்லை. அரசை நடத்த திறன் கொண்டவர்கள் யாரும் இல்லையென்றால் மக்களுக்கான பணிகளை எப்படி செய்வார்கள்?”

என விமர்சித்துள்ளார்.