கலிபோர்னியா:

டக்கு கலிபோர்னியா பகுதியில் இன்று பாரம்பரியம்மிக்க பூண்டுத் திருவிழா நடை பெற்றுக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் சம்பவம் இடத்திலேயே பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பகுதியில் உள்ள  கில்ராய் நகரில் ஆண்டு தோறும்  “பூண்டு திருவிழா”  நடைபெறுவது வழக்கம். அதுபோல நேற்று அங்கு பூண்டும் திருவிழா நடைபெற்றது.  இதில் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.

பொதுமக்கள் அனைவரும் திருவிழாவில் உற்சாகமாக கலந்துகொண்டிருந்த வேளையில், மாலை 5.30 மணி அளவில் திருவிழா கூட்டத்தில் புகுந்த ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது திடீரென  கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். குண்டு சத்தம்  கேட்டதும் அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு  நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதுகுறித்து தகவலறிந்த கில்ராய் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணி களை மேற்கொண்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில்,  3 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். படு காயங்களுடன் 11 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படு கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.