டலூர்

டலூரில் அரசு பேருந்தில் இருந்து மாணவி விழ்நுததால் பஸசை ஓட்டிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கடலூரில் அரசுப் பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த கல்லூரி மாணவி படு காயமடைந்தார். இந்த பேருந்தை நிறுத்துவது போல் சென்று, திடீரென எடுத்ததால் கீழே விழுந்து விட்டதாக மாணவி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இச்சசம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேருந்தை அலட்சியமாக ஓட்டியதால், தற்காலிக ஊழியர்களான ஓட்டுநர் ரகோத்தமன் மற்றும் நடத்துனர் ஜெயபால் ஆகியோரை பணி நீக்கம் செய்வதாக கடலூர் அரசு போக்குவரத்து கழகம் உத்தரவு பிரப்பித்துள்ளது.