சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படம் நடிக்கிறார் ஆர்யா.

இந்த புதிய படம் ஆக்ஷன் ஜானரில் தயாராகிறது. படம் முழுக்க ஆக்ஷன் அதிரடிதானாம். தற்போது ஸ்கிரிப்டின் இறுதி வடிவத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். அது முடிந்ததும் ப்ரீ புரொடக்ஷனை தொடங்கி இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சக்தி சௌந்தர்ராஜன் வித்தியாசமான இயக்குனர்.அவரின் நாணயம் வங்கிக் கொள்ளையைப் பற்றியது. நாய்கள் ஜாக்கிரதை துப்பறியும் கதை, மிருதன் ஸாம்பி கதை, டிக் டிக் டிக் விண்வெளியை மையப்படுத்தியது. கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளியான டெடி ஃபேண்டஸிவகை.