இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது.

ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி, கபிலனாக நடித்த ஆர்யா இருவரும் சைக்கிளில் செல்லும் காட்சியை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியாகின.

ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, பசுபதியின் பெயரில் ஏராளமான போலி ட்விட்டர் அக்கவுண்டுகள் உருவாகின. இந்நிலையில் நடிகர் ஆர்யா, ”வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே. குத்துச்சண்டைய விட ரத்த பூமி. உன்னோட பேர்ல இங்க நெறைய பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சதும், ஒரிஜினல் நாதாண்டானு உள்ள வந்த பாத்தியா. உன் மனசே மனசு தான். வா வாத்தியாரே இந்த உலகத்துக்குள்ள போலாம்” எனக் குறிப்பிட்டு பசுபதியின் ட்விட்டர் அக்கவுண்டை குறிப்பிட்டிருக்கிறார் ஆர்யா.

இதற்கு பதிலளித்த பசுபதி, “ஆமாம் .. கபிலா, குத்துச்சண்டையே உலகம்னு இருந்துட்டேன், பரம்பரைக்கு ஒண்ணுனா மொத ஆளா வந்துருவேன். நான் உன் சைக்கிள்லயே பின்னாடி ஒக்கந்துகிறேன், என்ன எல்லா எடத்துக்கும் கூட்டிகினு போ” என்று தெரிவித்திருக்கிறார்.