ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ உயரதிகாரி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஜம்மு காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகிலுள்ள தங்தார் செக்டர் பகுதியில் 6வது ரைபிள்ஸ் நிறுவனத்தின் மேஜராக பயாசுல்லா கான் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணங்கள் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.