சென்னை

தெற்கு ரயில்வே இன்றும் நாளையும் அரக்கோணம் மின்சார ரயில்கள் பக்த் நேர ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இன்று தெற்கு ரயிவே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் அரக்கோணம் பணிமனையில் இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (29-ந்தேதி) மதியம் 2.40 மணி முதல் மாலை 6.40 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) மதியம் 12.40, 1.25 மாலை 3.50, 4.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் திருவள்ளூர் – அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, அரக்கோணத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) மாலை 3.40, 4.50, 6 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரயில் அரக்கோணம் – திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) மதியம் 2.15, மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரயில் திருவள்ளூர் – திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, திருத்தணியிலிருந்து இன்று மற்றும் நாளை மாலை 3.45, 5, 6.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரயில் திருத்தணி – திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையிலிருந்து இன்று மற்றும் நாளை மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் திருவள்ளூர் – அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, அரக்கோணத்தில் இருந்து இன்று மற்றும் நாளை மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் அரக்கோணம்- திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.”

என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.