சென்னை: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இன்று  (ஏப்ரல் 6ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாக  இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவும், மேற்கு வங்க மாநிலத்தில் 3வது கட்ட வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும்  இன்று சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அத்துடன் காலியாக உள்ள குமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 3 ஆயிரத்து 998 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஆண் வேட்பாளர்கள்  3 ஆயிரத்து பேர் பெண் வேட்பாளர்கள் 411  பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் அடங்குவர். தமிழகத்தில் வாக்குப்பதிவுக்காக ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இவற்றுடன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 205 கட்டுப்பாட்டு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 807 ‘விவிபேட்’ கருவிகளும் இணைக்கப்பட்டுள்ளன.,. வாக்களிக்க 6.28 கோடி பேரும்,  வாக்குப்பதிவுக்காக 88,900 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது..

தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணியில் 4 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்

புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளும், கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில்  4,72,650 ஆண் வாக்காளர்கள், 5,31,431 பெண் வாக்காளர்கள் மற்றும் 116 மூன்றாம் பாலின வாக்காளர்கள்  வாக்களிக்க தயாராக உள்ளனர். மொத்தம்  10,04,197 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.

கேரள  மாநிலத்தில் 140 சட்டமன்ற தொகுதிகளுடன் ‘ காலியாக உள்ள மலப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது

ஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு  ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், நாளை 3வது கட்டம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 40 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் 8கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 294 தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்திவ்ல , இதுவரை 2 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நாளை 3வது கட்டமாக  31 தொகுதிகளுக்கு  இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.