சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் நியமன ஆணையை  தமிழ்நாடு அரசு ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் 1,807 ஆரம் சுகாதார நிலையங்களும், 8,713 துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும், 460 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. இங்கு நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் பணியாளர் ஒருவரும் பணியாற்றி வருகின்றனர். மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் பல பலர் பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற ஆரம்ப சுகாதார நிலையங்களில், புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளில் படித்து வரும் மருத்துவர்கள் ஓராண்டு பணியாற்ற வேண்டும். அதன்படி பலர் பணியாற்றி வருகின்றனர். ஓராண்டுக்கு பிறகு அவர்கள் நகர்புறங்களுக்கு மாற்றலாகி சென்று விடுவதால், பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவர்கள் இன்றி காணப்படுகிறது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) சார்பில் தேர்வு நடத்தி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அதனப்டி,  தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த 1,021 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) சார்பில் கடந்த ஆண்டு (2023) . இந்த தேர்வை எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த 25 ஆயிரம் மருத்துவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்ச்சி பெற்றவர்களில் 1,021 மருத்துவர்கள் பல்வேறு ஆரம்ப சுகாதார நியலைங்களுக்கு  நியமிக்கப்பட்டனர்.

ஆனால், பலர் அங்கு சென்று பணியாற்ற விருப்பமில்லாமல், பணியில் சேரவில்லை. அதாவது,  சுமார்  193 பேர் பணி ஆணை பெற்றும் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகதார நிலையங்களில் பணியில்  சேரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களது பணி ஆணையை பொது சுகாதாரத் துறை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த இடங் களுக்கு  வர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களை அப்பணியிடங்களில் நியமித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது,   இது வழக்கமான ஒரு நடைமுறைதான் என்றும், காலிப் பணியிடங்கள் இருக்கக்கூடாது என்ற நோக்கில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.