சென்னை
தமிழக அரசு வரும் 29 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உதவித்தொகைக்கு விண்ண்ப்பிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கி வைத்தார்.
மாதந்தோறும் இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு அதாவது, ரேஷன் கார்டில் உள்ள குடும்பத்தலைவிக்கு ரூ. 1000 வழங்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் உள்ள 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகளில் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் தவிர 1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத்தொகை பெற முடியவில்லை.
ஆகவே தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை நடைமுறைப்படுத்தும் வகையில் வருகிற 29-ந்தேதி முதல் இந்த உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.