சென்னை :
பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா தனது பேஸ்புக் பக்கத்தின் கவர் புகைப்படத்தை சற்றுமுன் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கரைக்குடியின் பனம்பட்டி கிராமத்தில் ஹெச்.ராஜா பிரச்சாரம் மேற்கொண்டபோது, சிறுவர்களிடமாவது நல்ல பெயர் வாங்குவோம் என்ற ஆசையில் அவர்களுடன் பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது ஒரு சிறுவனிடம், நீ என்ன படிக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவனும், ஏழாம் வகுப்பு படிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளான்.

பின்னர், அந்த சிறுவனிடம், பிரதமர் பெயர் என்ன? என்று கேட்டுள்ளார். இதற்கு அந்த சிறுவன் கொஞ்சம் கூட பயப்படாமல், அவர் யார் என்று எனக்குத் தெரியாது எனக் கூறினான். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஹெச்.ராஜா, துண்டுப் பிரசுரத்திலிருந்த மோடியின் படத்தை காட்டி, இவர்தான் பிரதமர் மோடி எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து,துண்டுப்பிரசுரத்தில் தனது புகைப்படத்தைக் காட்டி இது யார் என்று கேட்டுள்ளார். இதற்கும் அந்தச் சிறுவன் தெரியாது என கூறியுள்ளான். “அடே நான்தானடா அது” என தனது முகக்கவசத்தை கழற்றிக் காண்பித்துள்ளார் ஹெச்.ராஜா. “ஓ, நீங்க தானா அது..?” என சிறுவன் கூற, “அட ஆளவிடுடா சாமி” என அங்கிருந்து ஓட்டமெடுத்த ஹெச்.ராஜா, தொகுதி மக்களிடையே தனக்கு மரியாதை இவ்வளவுதானா என நொந்து போனார்.

இந்நிலையில், பாஜக பெயர சொன்னா ஓட்டுவராது என்பதை உணர்ந்த கொண்ட ஹெச். ராஜாவின் நூதன வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளார்.

இதற்காக தனது பேஸ்புக் பக்கத்தின் கவர் புகைப்படத்தை சற்றுமுன் மாற்றி பதிவிட்டுள்ள பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா, அதில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஹெச். ராஜா என தாமரை சின்னத்துடன் வரையப்பட்டு, வாக்களிப்பீர் தாமரை சின்னத்திற்கு என எழுதப்பட்டுள்ளது. ஒரு கட்சியின் தேசிய செயலாளராக இருந்தவர். தான் போட்டியிடும் கட்சியின் பெயரைக் கூட அறிவிக்காமல் கூட்டணி கட்சியின் பெயரை அறிவித்து வாக்கு கேட்பது கள யதார்த்தத்தை உணர்த்துகிறது.